Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி .. மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 22 Sept 2022 7:32:41 PM

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 23ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி  ..   மின் விநியோகம் தடை

நாமக்கல் : தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ளவைகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது.

மேலும் மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே அதன்படி நாளை நாமக்கல் மாவட்டம் ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பள்ளிபாளையம் எஸ்.பி.பி. காலனி பகுதி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power supply interruption,namakkal ,மின் விநியோகம் தடை,நாமக்கல்

அதனால் பட்லூர்,வெள்ளிக்குட்டை, வெடியரசன், இறையமங்கலம், பாப்பம்பாளையம், காடச்சநல்லூர், பள்ளிபாளையம், கொக்கராயன்பேட்டை, தாஜ் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து முசிறி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அத்தியம்பாளையம், நாய்க்கடிபுதூர், கொட்டாம்பட்டி, பல்புடுங்கி, அக்கலாம்பட்டி, குன்னங்கல், இளையாபுரம், குன்னங்கல், புதூர், முசிறி, மாரப்பநாயக்கன்பட்டி,குப்பகவுண்டன்புதூர், புரசாபாளையம், சிலுவம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :