Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உளவுத்துறை தகவல்... இம்ரான்கான் மீது மீண்டும் தாக்குதல் நடக்கலாமாம்

உளவுத்துறை தகவல்... இம்ரான்கான் மீது மீண்டும் தாக்குதல் நடக்கலாமாம்

By: Nagaraj Sat, 19 Nov 2022 1:00:55 PM

உளவுத்துறை தகவல்... இம்ரான்கான் மீது மீண்டும் தாக்குதல் நடக்கலாமாம்

இஸ்லாமாபாத்: மீண்டும் நடக்கலாம்... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் நீதிபதி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இம்ரான்கானின் தலைமையில் பாகிஸ்தான்-பிடிஐ நடத்திய பேரணியில் மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார்.

imran khan,judge,information,intelligence,attempted assassination,shock ,இம்ரான்கான், நீதிபதி, தகவல், உளவுத்துறை, கொலை முயற்சி, அதிர்ச்சி

இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார். நேற்று இம்ரான்கான் கட்சியினரின் போராட்டத்துக்கு எதிரான வழக்கு ஒன்றை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது நீதிபதி அமீர் பாரூக் உளவுத்துறை தகவல்களை மேற்கோள்காட்டி இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார். இந்த தகவல் இம்ரான்கான் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|