Advertisement

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து அறிமுகம்

By: Nagaraj Thu, 26 Jan 2023 9:32:03 PM

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா மருந்து அறிமுகம்

ஐதராபாத்: மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பரவலால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

vaccine,corona,nasal route,introduction,incovac ,தடுப்பூசி, கொரோனா, மூக்கு வழி, அறிமுகம், இன்கோவாக்

இந்நிலையில் தற்போது இன்கோவாக் என்ற பெயரில் மூக்கு வழி செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த டிச.23ல் ஒன்றிய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ரூ.325 என்ற விலையிலும், தனியாருக்கு ரூ.800 என்ற விலையிலும் இன்கோவாக் விநியோகம் வழங்கப்படுகிறது. இன்கோவாக் தடுப்பூசியை அமைச்சர்கள் மனசுக் மாண்டவியா, ஜிதேந்தர் சிங் அறிமுகம் செய்தனர்.

Tags :
|