Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகளவில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

அதிகளவில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

By: Nagaraj Sat, 19 Dec 2020 10:00:22 AM

அதிகளவில் மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

அதிகளவில் மழை பெய்யக்கூடும்... எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75 மில்லிமீற்றர் அளவிலான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

public,observation,department,may rain ,பொதுமக்கள், அவதானம், திணைக்களம், மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொது மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அத்திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags :
|