என்னை 3வது முறையாக முதல்வராக்கியவர் சசிகலாதான்... ஓ.பி.எஸ். பேச்சு
By: Nagaraj Tue, 25 Apr 2023 7:55:02 PM
திருச்சி: சசிகலாதான் காரணம்... என்னை மூன்றாவது முறையாக முதல்வராக்கியவர் சசிகலாதான் என்று திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் அதிமுக பொன்விழா, கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா முப்பெரும் விழாவாக நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சியின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தாலும் மாநாட்டில் அதிமுக கொடிகள் ஏற்றப்பட்டன.
மாநாட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செங்கோல் அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநாட்டில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிக்கணக்கில் பணம் குவித்து மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி விலைக்கு வாங்குவதாக குற்றம்சாட்டினார். கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதன்பிறகு, அதிமுகவின் 50 ஆண்டுகால அபகரிப்பு வேலையை ரத்து செய்த அரசியல் மோசடிக்காரர்கள், வியாபாரிகள், நயவஞ்சகர்கள், துரோகிகள் என்று கபட வேதாதாரி கடுமையாக விமர்சித்தார். எனக்கு இரண்டு முறை முதலமைச்சராக ஜெயலலிதா அவர்கள் நியமனம் செய்தார்கள்.
மூன்றாம் முறை சசிகலாதான் என்னை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அப்போது திரும்ப என்னிடம் முதலமைச்சர் பதவியை கேட்டார்கள் கொடுத்துவிட்டு வந்து விட்டேன் என பேசிய ஓ.பன்னீர்செல்வம், மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொது செயலாளராகவோ இருக்க விருப்பம் இல்லை என்றும் உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது. அதைதான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா விரும்பினார்கள் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.