Advertisement

சித்ரா தற்கொலை வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நிறைவு

By: Nagaraj Fri, 25 Dec 2020 10:47:08 AM

சித்ரா தற்கொலை வழக்கில் கோட்டாட்சியர் விசாரணை நிறைவு

விசாரணை நிறைவு...சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யா நடத்தி வந்த விசாரணை நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. விரைவில், அந்த விசாரணை அறிக்கை நசரத்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே பழஞ்சூர் தனியார் நட்சத்திர ஹோட்டலில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையின் அடிப்படையில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் கைது செய்தார்கள். திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக பெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யா கடந்த 14-ம் தேதி முதல் விசாரணையில் ஈடுபட்டார்.

kottachiyar,inquiry,completion,actress chitra,conclusion ,கோட்டாட்சியர், விசாரணை, நிறைவு, நடிகை சித்ரா, முடிவு

இதில், முதல் நாள் விசாரணையில் சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கடந்த 15, 17 ஆகிய தேதிகளில், ஹேம்நாத்தின் பெற்றோர் மற்றும் ஹேம்நாத்திடம் விசாரணை நடத்தினார்.

பிறகு, சித்ராவுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர்- நடிகைகள், சித்ரா மற்றும் ஹேம்நாத் ஆகியோரின் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று சித்ராவின் உதவியாளரான ஆனந்த் என்பவரிடம் கோட்டாட்சியர் திவ்யா விசாரணை நடத்தினார். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த விசாரணையோடு, சித்ரா தற்கொலை தொடர்பாக கோட்டாட்சியரின் விசாரணை முடிவுக்கு வந்திருக்கிறது.

Tags :