Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 6 மாதத்தில் தொடங்கப்படுகிறது... எலான் மஸ்கின் புதிய அறிவிப்பு

6 மாதத்தில் தொடங்கப்படுகிறது... எலான் மஸ்கின் புதிய அறிவிப்பு

By: Nagaraj Fri, 02 Dec 2022 11:39:56 AM

6 மாதத்தில் தொடங்கப்படுகிறது... எலான் மஸ்கின் புதிய அறிவிப்பு

அமெரிக்கா: எலான் மஸ்கின் புதிய அறிவிப்பு... மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப்பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக, நியூராலிங்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமெரிக்காவின் மருந்துக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைக்கப்பெறாததால், பலமுறை தள்ளிவைக்கப்பட்டது.

elon musk,announcement,usa,drug control,chip ,எலான் மஸ்க், அறிவிப்பு, அமெரிக்கா, மருந்துக்கட்டுப்பாடு, சிப்

மேலும் நியூராலிங்க் ஊழியர்கள் பணி மீது அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், அதன் போட்டி நிறுவனமான சிங்க்ரானை - ஐ அணுகியுள்ளார். Synchron நிறுவனம் ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் 4 பேரை இந்த சோதனைக்கு உட்படுத்தியிருப்பது நினைவுகூரத்தக்கது.

ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் ஊழியர்களுக்கு கல்தா கொடுத்து அவர்களை வெறுப்பை சம்பாதித்தார். தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் நியூராலிங்க் ஊழியர்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Tags :
|