Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பார்: பூட்டு போட்டு போராட்டம்

விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பார்: பூட்டு போட்டு போராட்டம்

By: Nagaraj Sun, 23 Apr 2023 10:07:07 PM

விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பார்: பூட்டு போட்டு போராட்டம்

சேலம்: போராட்டம்... சேலத்தில் விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பாரில், மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் உள்ளே வைத்து பூட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டவுன் பேருந்து நிலையம் அருகே தாதுபாய் குட்டைப்பகுதியில் தொடர்ந்து விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே மதுபான பார் திறக்கப்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இன்று பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

madhubar,protests,police,negotiations,covered their faces ,மதுபார், போராட்டம், போலீசார், பேச்சுவார்த்தை, முகத்தை மூடினர்

தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மதுபான பாருக்குள் இருந்தவர்களை வெளியேற்ற, அவர்கள் முகத்தை மூடிக் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், காலையிலேயே மதுபான பாரை திறந்து விற்பனை நடக்கிறது. இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அதனால்தான் இந்த போராட்டம் நடந்தது. இனி இதுபோன்று காலையிலேயே பார் திறக்கப்பட்டால் மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags :
|