Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

By: vaithegi Mon, 05 Sept 2022 5:49:23 PM

மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

மதுரை :தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு துணை மின் நிலையங்கள் வாயிலாக மின் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தகைய துணை மின் நிலையங்களை சரியாக பராமரித்து வருவதன் மூலம் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும்.

எனவே இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி மதுரை மாவட்டம் மேலூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்விநியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,madurai ,மின்தடை ,மதுரை

இதை அடுத்து உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, இளமனூர், வரிச்சியூர், ஓடைப்பட்டி, களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ராஜாக்கூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர், நாட்டார்மங்கலம், தச்சநேந்தல், செங்கோட்டை, இஸ்லானி, மீனாட்சிபுரம், செவல்பட்டி, சுப்ரமணியபுரம், கொட்டாகுளம், சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நரசிங்கப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், ஆலம்பட்டி, சாணிப்பட்டி, கேசம்பட்டி, புலிப்பட்டி, அரிட்டாபட்டி, அ. வல்லாலபட்டி, திருவாதவூர், கட்டையன்பட்டி, கொட்டக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :