Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி

By: vaithegi Wed, 12 Oct 2022 4:39:55 PM

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை  பராமரிப்பு பணி

திருப்பூர் : பராமரிப்பு பணி ... திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தாராபுரம் கோட்டத்தில் செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.

எனவே அதன் காரணமாக இந்த துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை ஏற்படும் என தாராபுரம் கோட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

maintenance work,tirupur ,பராமரிப்பு பணி,திருப்பூர்

இதனை தொடர்ந்து செலாம்பாளையம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான, தளவாய்பட்டணம், செலாம்பாளையம், சென்னாக்கல்பாளையம், ஊத்துப்பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், சந்திராபுரம் ஆகிய பகுதிகளும்

மேலும் தேவநல்லூர், நாட்டுக்கல்பாளையம், சிக்கினாபுரம், கள்ளிவலசு, வட்டமலைபுதூர், ரஞ்சிதாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

Tags :