Advertisement

இங்கு 5 நாட்களுக்கு இறைச்சி கடைகள் மூடல்

By: vaithegi Sat, 28 Jan 2023 3:02:49 PM

இங்கு 5 நாட்களுக்கு இறைச்சி கடைகள் மூடல்

பெங்களூரு: 5 நாட்கள் இறைச்சி கடைகள் மூடல் .... கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் எலகங்கா பகுதியில் விமான படை தளம் உள்ளது. இத்தளத்தில் ஆண்டுக்கு 1 முறை விமான கண்காட்சி நடத்தப்படும். இக்கண்காட்சியில் இந்தியா மற்றும் பிற நாட்டு விமான நிறுவனங்களும் பங்கேற்கும்.

இதையடுத்து கண்காட்சியின் போது விமானம் தொடர்பான சாகச நிகழ்வுகளும் இடம்பெறும். நடப்பு ஆண்டுக்கான “ஏரோ இந்தியா” விமான கண்காட்சி பிப் 13-ம் தேதி தொடங்க உள்ளது.இந்த கண்காட்சியானது தொடர்ந்து 5 நாட்கள் அதாவது பிப்17-ம் தேதி வரை நடைபெறும்.

meat,bangalore,exhibition ,இறைச்சி ,பெங்களூரு,கண்காட்சி

இதனை அடுத்து இதில் 713 விமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை முன்னிட்டு பெங்களூருவில் விமான தளத்திலிருந்து சுமார் 10 கி.மீ சுற்றளவில் இருக்கக்கூடிய இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 5 நாட்களும் கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளை திறக்கவும் விற்பனை செய்யவும் ஜன. 30-ம் தேதி முதல் பிப் 20-ம் தேதி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலுக்கும் இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது விமானப்படை விதி சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|