Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிகோகா நகரின் தெருக்களில் சேலை கட்டி நடந்து வந்த ஆண்கள்

சிகோகா நகரின் தெருக்களில் சேலை கட்டி நடந்து வந்த ஆண்கள்

By: Nagaraj Wed, 16 Nov 2022 11:02:00 PM

சிகோகா நகரின் தெருக்களில் சேலை கட்டி நடந்து வந்த ஆண்கள்

சிகாகோ: இந்திய மணமகன் திருமணத்திற்கு அவருடைய 2 ஆண் நண்பர்கள் மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க சேலை அணிந்து வந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

2 ஆண்கள் சேலை உடுத்திக்கொண்டு இந்திய நண்பரின் திருமணத்திற்கு மாஸாக நடந்து வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.

அந்த வீடியோவில், சிகாகோவில் தன்னுடைய இந்திய மணமகன் திருமணத்திற்கு அவருடைய 2 ஆண் நண்பர்கள் மணமகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டனர்.

video,groom,friends,viral,photo,wearing saree ,வீடியோ, மணமகன், நண்பர்கள், வைரல், புகைப்படம், சேலை அணிந்தனர்

இதனையடுத்து, மணமகனுக்கு தெரியாமல் நண்பர்கள் இரண்டு பேரும் ஒரு பெண் உதவியுடன் சேலை உடுத்திக்கொண்டு, பொட்டு வைத்து, வளையல்கள் போட்டு சிகாகோ சாலையில் மாஸாக நடந்து வந்தனர்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத மணமகன் இவர்கள் இருவரும் நடந்து வருவதைப் பார்த்து வெட்கத்தில் வெடித்துச் சிரித்தார். பிறகு நண்பர்களை அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் மூவரும் கை கோர்த்துக் கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags :
|
|
|
|