Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

By: vaithegi Thu, 13 Apr 2023 1:45:51 PM

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் .. அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றுஅமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சில்லரை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்றும், இந்தாண்டில் 4,829 கடைகளாக குறைக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் டாஸ்மாக் பணியாளர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்படும் எனவும் உறுதி அளித்தார்.

மேலும் கோயில், பள்ளிகள் அருகே இயங்கியதாக வந்த புகாரில் கடந்த 2 ஆண்டுகளில் 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.1100, விற்பனையாளர்களுக்கு ரூ.930, உதவியாளர்களுக்கு ரூ.840 மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் அதிகரித்து இந்த மாதம் முதல் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

senthil balaji,tasmac ,செந்தில் பாலாஜி ,டாஸ்மாக்


இதனை அடுத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பண பாதுகாப்பு பெட்டகங்கள் நிறுவப்படும் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து தமிழகத்தில் மதுவிற்பனை கடந்த 2021-22 -ம் ஆண்டை விட 2022-23--ம் ஆண்டு ஒரே நிதியாண்டில் 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது.


Tags :