Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் பகுதியில் காற்றுடன் கூடிய மிதமான மழை... மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் பகுதியில் காற்றுடன் கூடிய மிதமான மழை... மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Tue, 25 Apr 2023 6:38:32 PM

திருவள்ளூர் பகுதியில் காற்றுடன் கூடிய மிதமான மழை... மக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

தமிழ்நாட்டின் பல இடங்களில் வெயில் வாட்டி வரக்கூடிய நிலையில் பெய்த கோடை மழையால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது. கோடை காலம் தொடங்கியதால் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் கடம்பத்தூர், ஈக்காடு, மணவாள நகர் மற்றும் பூண்டி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது.

heavy rain,banana trees,kanyakumari,summer rain,happiness ,
கனமழை, வாழை மரங்கள், கன்னியாகுமரி, கோடை மழை, மகிழ்ச்சி

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை, கந்திலி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளியுடன் கனமழை கொட்டியது. இதில் தாத்தன்குட்டை பகுதியில் போஸ் என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை பெய்தது. தோவாளை, பண்டாரபுரம், முத்துநகர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரம் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் குளிர்ச்சி நிறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :