Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூரில் நாளை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணி...மின்தடை

திருப்பூரில் நாளை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணி...மின்தடை

By: vaithegi Thu, 28 July 2022 8:53:47 PM

திருப்பூரில் நாளை (ஜூலை 29) மாதாந்திர பராமரிப்புப் பணி...மின்தடை

திருப்பூர் : நாளை (ஜூலை 29) அன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. அதனால் அங்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்விநியோகம் தடைஎன மின்வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதை தொடர்ந்து சீரான மின் விநியோகம் நடக்க ஏதுவாக பராமரிப்பு பணியின் போது மின்மாற்றிகளில் பழுது, மின்கம்பங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage,tirupur ,மின்தடை ,திருப்பூர்

எனவே நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெரும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பச்சாம்பாளையம், பரமசிவம்பாளையம், ஸ்ரீராம் நகா், பெரியபாளையம், கே.ஆா்.ஆா்சி.அமிா்தவா்ஷினி நகா், கே.கே.ஆா்.ஆா்சி.பிருந்தாவன் நகா், பழைய ஊஞ்சம்பாளையம், புது ஊஞ்சம்பாளையம் ஆகிய பகுதிகளும்

மேலும் பொங்குபாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூா், நல்லாத்துத்ப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை என்று மின்வாரிய செயற்பொறியாளர் அவிநாசி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :