டெல்லி உட்பட பல மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
By: Nagaraj Tue, 18 Oct 2022 6:35:15 PM
டெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று நாட்டின் பல மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் தொடர்புகளுக்கு மத்தியில் இந்த சோதனை நடந்துள்ளது.
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :
ariana |
delhi |
officers |
punjab |