Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மிரட்டல் வழக்கில் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

மிரட்டல் வழக்கில் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

By: Nagaraj Sat, 01 Apr 2023 11:30:51 PM

மிரட்டல் வழக்கில் இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு வழக்கு விசாரணையிலும் இம்ரான் கான் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. தற்போது பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

arrest,court,imran khan, ,இம்ரான் கான், கைது, வாரண்ட்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜெபா சவுத்ரியை மிரட்டியதாக இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இம்ரான் கானுக்கு எதிராக நேற்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, இதுவரை விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், அவரை ஏப்ரல் 18ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags :
|
|