Advertisement

மதுரை மாவட்டத்தில் அக்.1 மின்தடை

By: vaithegi Fri, 30 Sept 2022 4:16:07 PM

மதுரை மாவட்டத்தில் அக்.1 மின்தடை


மதுரை : தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது மின் விநியோக பாதைகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் ஆகியவற்றவை கண்டறியப்பட்டு சரி செய்யப்படுகிறது.

மேலும் மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.நாளை (அக்.1) மதுரை மாவட்டத்தில் சமயநல்லூர், வாடிப்பட்டி, அரசரடி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

power outage,madurai ,மின்தடை ,மதுரை

அதனால் பரவை, பேங்க் காலனி, ஆகாஷ் கிளப், சரவணா நகர், வித்யாவாகினி அபார்ட்மெண்ட், கூலாண்டிப்பட்டி,எல்லையூர், தடாகநாச்சிபுரம், ராமராஜபுரம், செமினிபட்டி, குட்லாடம்பட்டி, அங்கப்பன் கோட்டை போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

மேலும் அதே போன்று கொன்னவாயன் சாலை, இந்திரா நகர், மேல மற்றும் கீழவைத்தியநாதபுரம், சிங்கம்பிடாரி கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரியம் தரப்பில் அறிவித்துள்ளது.

Tags :