Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மக்கள் ஆசி இருக்கு... வேட்பு மனுதாக்கலுக்கு பின் டிம்பிள் யாதவ் கருத்து

மக்கள் ஆசி இருக்கு... வேட்பு மனுதாக்கலுக்கு பின் டிம்பிள் யாதவ் கருத்து

By: Nagaraj Tue, 15 Nov 2022 12:07:31 PM

மக்கள் ஆசி இருக்கு... வேட்பு மனுதாக்கலுக்கு பின் டிம்பிள் யாதவ் கருத்து

லக்னோ: மெயின்புரி எம்.பி., தொகுதி இடைத் தேர்தலுக்கு டிம்பிள் யாதவ் தனது கணவர் அகிலேஷ் யாதவுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் சமாஜ்வாடி கட்சிக்கு மெயின்புரி மக்களின் ஆசிகள் என்றும் உண்டு என தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி தொகுதி எம்.பி. பதவி வகித்து வந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், கடந்த மாதம் 10-ம் தேதி மரணமடைந்தார். இதனால் அவரது தொகுதி காலியாக உள்ளது. மெயின்புரி எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவியும், முலாயம் சிங் யாதவின் மருமகளுமான டிம்பிள் யாதவ் (44), சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

information,nomination,filing,not declared,mulayam singh ,தகவல்கள், வேட்புமனு, தாக்கல், அறிவிக்கவில்லை, முலாயம் சிங்

இந்நிலையில், டிம்பிள் யாதவ் தனது கணவர் அகிலேஷ் யாதவுடன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின் அவர் கூறுகையில், சமாஜ்வாடி கட்சிக்கு மெயின்புரி மக்களின் ஆசிகள் என்றும் உண்டு என தெரிவித்தார்.

மாமனார் மறைந்த முலாயம் சிங் யாதவின் பாரம்பரியத்தை அங்கு தொடருகிற விதத்தில் அவரது மருமகளுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதிக்கான வேட்பாளரை பா.ஜ.க. இன்னும் அறிவிக்கவில்லை.

Tags :
|