ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை
By: Nagaraj Mon, 05 June 2023 7:07:07 PM
வாடிகன்: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக போப் பிரான்சிஸ் பிரார்த்தனை மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 275 பேர் பலியாகினர். இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மிக மோசமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரயில் விபத்தில் இறந்தவர்களுக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் வாடிகனில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.
மேலும் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலியையும் மக்கள் செலுத்தினர். இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படக்கூடாது என்றும் பிரார்த்தனை செய்தனர்.
Tags :
pope |
prayer |
dead |