Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை

By: vaithegi Sun, 31 July 2022 4:16:36 PM

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 1) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை

திருப்பூர் : மின்கசிவு ஏற்பட்டு சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. அதனால் இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 1) வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை என தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார்.

power outage,tirupur ,மின்தடை ,திருப்பூர்

அதன்படி வருகிற திங்கட்கிழமை வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியின் நிமித்தம் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம்,

மேலும் அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :