Advertisement

நாளை (செப்டம்பர் 1) திருப்பூரில் மின்தடை

By: vaithegi Wed, 31 Aug 2022 1:25:34 PM

நாளை (செப்டம்பர் 1) திருப்பூரில் மின்தடை

திருப்பூர் : நாளை திருப்பூரில் உடுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதை தொடர்ந்து உடுமலை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து துணை மின் நிலையத்தில் பயன்பெறும் பகுதிகளான உடுமலை நகரம், பழநி பாதை, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலூர், கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டம்பட்டி, பொட்டயம்பாளையம், பொட்டிநாயக்கனுார், சோமவாரப்பட்டி, ஆர்.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

tirupur,power outage ,திருப்பூர் ,மின்தடை

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பெதப்பம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர் நகர், காந்திநகர் இரண்டு, சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லுாரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி ஆகிய பகுதிகளும்

மேலும் குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags :