திங்கட்கிழமையன்று இந்த இடங்களில் மின் விநியோகம் தடை
By: vaithegi Sat, 28 Jan 2023 3:18:51 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் படி, ஜன 30-ம் தேதி ஆகிய திங்கட்கிழமையன்று காலை 9 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
இதனை அடுத்து பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆத்தூர்: புளியங்குறிச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி,வத்திராயிருப்பு: பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி
அதைத்தொடர்ந்து வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள், ராசிங்காபுரம்: ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் ஜன 30-ம் தேதி மின்சாரம் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.