Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By: Nagaraj Sun, 31 July 2022 8:37:39 PM

தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்த மாணவி தூக்கு மாட்டி இறந்தார். இதற்கு விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் அகிலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

investigation,college administration,parents,student,fellow students ,விசாரணை, கல்லூரி நிர்வாகம், பெற்றோர், மாணவி, சகமாணவிகள்

இந்நிலையில் அந்த மாணவி நேற்று விடுதியை காலி செய்துவிட்டு வீட்டிலிருந்தே கல்லூரிக்கு வந்து செல்ல முடிவு செய்திருந்ததாக தெரிய வந்துள்ளது.

அதன் அடிப்படையில் சக மாணவிகள், கல்லூரி நிர்வாகம், பெற்றோர் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மாணவியின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் எனவும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Tags :