புதுச்சேரி - சென்னை பேருந்துகள் நிறுத்தம் என அறிவிப்பு
By: Nagaraj Fri, 09 Dec 2022 4:39:38 PM
சென்னை : புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் இன்று இரவு முதல் நாளை காலை வரை புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னைக்கு வரும் புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதன்படி ஐசிஆர் சாலை வழியாக சென்னை வரும் புதுச்சேரி பேருந்துகளும், காரைக்கால் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்படும்.
Tags :