Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

By: Karunakaran Fri, 18 Sept 2020 1:15:02 PM

கொரோனா தடுப்பூசிகளை வாங்க பணக்கார நாடுகள் முன்னணி மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ரஷியா, இந்தியா, இஸ்ரேல் என பல நாடுகளும் தடுப்பூசியை உருவாக்கி, அவற்றை பல்வேறு கட்டங்களாக மனிதர்களுக்கு செலுத்தி பார்த்து சோதித்து வருகின்றன. தற்போது பணக்கார நாடுகள், ஏற்கனவே முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளின் பாதிக்கும் மேலான டோஸ்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜி-20 நாடுகளின் சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகள் கூடி கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பற்றி விவாதிக்க உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் கூறுகையில், தேவைப்படுகிற அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை தயாரிக்கும் திறன் இந்த தயாரிப்பாளர்களுக்கு இல்லை. முன்னணியில் உள்ள 5 தடுப்பூசிகளும் வெற்றி பெற்றாலும் கூட இதற்கு சாத்தியம் இல்லை. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் அல்லது 61 சதவீதத்தினருக்கு 2022-ம் ஆண்டு வரை தடுப்பூசி கிடைக்காது என்று தெரிவித்துள்ளது.

rich countries,contract,pharmaceutical companies,corona vaccines ,பணக்கார நாடுகள், ஒப்பந்தம், மருந்து நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசிகள்

உலக மக்களில் பெரும்பாலோர் தடுப்பூசிக்கு தேவையானதை விட கூடுதல் காலம் காத்திருப்பார்கள். அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம், லாபம் சம்பாதிப்பதற்காக தனது தடுப்பூசி டோஸ்களை பணக்கார நாடுகளுக்கு வழங்கத்தான் வாக்குறுதி அளித்துள்ளது. அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் மூன்றில் இரு பங்கு டோஸ்களை வளரும் நாடுகளுக்கு அளிக்க உறுதி தந்துள்ளது என ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆக்ஸ்பாம் தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்ஸ்பாம் மற்றும் உலகின் பிற அமைப்புகள், மக்கள் தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளன. தேவையின் அடிப்படையில் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும். நியாயமான முறையில் வினியோகிக்கப்பட வேண்டும். மருந்து நிறுவனங்கள், தடுப்பூசிகளை பரந்த அளவில் உற்பத்தி செய்ய அனுமதித்தால்தான் இது நடக்கும். எல்லோருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு உலக பொருளாதாரத்தில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவாகும் என்று தெரிவித்துள்ளது.

Tags :