Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் ஆறுதல்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் ஆறுதல்

By: Nagaraj Sun, 28 June 2020 6:18:42 PM

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி தொலைபேசியில் ஆறுதல்

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார்.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்னர்.

பின்னர் கடுமையாகத் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர்.

actor rajinikanth,comfort,satanic,karate tyagarajan ,நடிகர் ரஜினிகாந்த், ஆறுதல், சாத்தான்குளம், கராத்தே தியாகராஜன்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது. மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் எதிர்ப்பைக் காட்ட வணிகர்கள் கடையடைப்பை நடத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி. கனிமொழி தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு இதுகுறித்துக் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலை அவரது நெருங்கிய நண்பர் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tags :