Advertisement

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்

By: vaithegi Fri, 06 Jan 2023 7:07:34 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும்

காஞ்சிபுரம் : நாளை பள்ளிகள் செயல்படும் .... தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை கடந்த டிசம்பர் மாதம் வலுவாக பெய்து, பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இதனை அடுத்து அரசு நிர்ணயித்த விடுமுறைகளை தவிர இது போன்ற எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக விடப்படும் விடுமுறைகளுக்கு பதிலாக வேறு ஒரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும்.

kanchipuram,schools ,காஞ்சிபுரம் ,பள்ளிகள்

அந்த வகையில் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த 12ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக நாளை மறுநாள் அதாவது ஜனவரி.9 ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags :