விரைவில் எனது ஆதரவாளர்களுடன் உலகத்தின் முன் தோன்றுவேன்
By: Nagaraj Sat, 01 Apr 2023 11:33:10 PM
பஞ்சாப்: அம்ரித்பால் சிங் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் தப்பித்துவிட்டேன் என்று நினைப்பவர்கள் தவறு. நான் மரணத்திற்கு பயப்படவில்லை. விரைவில் எனது ஆதரவாளர்களுடன் உலகத்தின் முன் தோன்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங் ஆனந்த்பூர் கல்சா ஃபுஜ் என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கி வந்ததால், அவரை கைது செய்ய பஞ்சாப் மா நில போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து அம்ரித் பால் சிங் தலைமறைவானார். அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை தேடி வரும் நிலையில், அவர் பல இடங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில், அம்ரித்பால் சிங் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் தப்பித்துவிட்டேன் என்று நினைப்பவர்கள் தவறு. நான் மரணத்திற்கு பயப்படவில்லை. விரைவில் எனது ஆதரவாளர்களுடன் உலகத்தின் முன் தோன்றுவேன்.
இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலில் உள்ள அலது பத்திதிண்டாவில் உள்ள குருத்வாராவில் அவர் தோன்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டதால், பஞ்சாபில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.