Advertisement

ஸ்டாலின் கனவு பலிக்காது; அமைச்சர் வேலுமணி ஆரூடம்

By: Nagaraj Mon, 02 Nov 2020 6:19:52 PM

ஸ்டாலின் கனவு பலிக்காது; அமைச்சர் வேலுமணி ஆரூடம்

ஸ்டாலின் கனவு பலிக்காது... ஸ்டாலின் கோவையை கைப்பற்ற நினைக்கிறார் அவரது கனவு பலிக்காது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , “திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி கோவை வந்து செல்கிறார். அத்துடன் அவர் பல பொய் புகார்களை கூறி வருகிறார்.

எப்படியாவது கோவை மாவட்டத்தை பிடித்துவிட வேண்டும் என ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்த கனவு ஒருபோதும் நினைவாகாது. ஏனென்றால் கோவை மாவட்டம் அம்மாவின் கோட்டை; இந்த யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்திற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் அளித்துள்ளார்.

people,chief,coimbatore,people,stalin,dream ,மக்கள், முதல்வர், கோவை, மக்கள், ஸ்டாலின், கனவு

50 ஆண்டுகளில் செய்ய முடியாததை ஐந்து ஆண்டுகளில் அவர் நிறைவேற்றி காட்டியுள்ளார். எனவே மக்களிடம் வாக்கு கேட்க நமக்கு மட்டும்தான் தகுதி உள்ளது. திமுகவினருக்கு தகுதி இல்லை. அவர்கள் வெறும் பொய் பிரச்சாரம் மட்டுமே கூறிவருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் பொய் பிரச்சாரங்களை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள்.

தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றி வரும் திமுகவினர் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஒரு விவசாயி அதிமுகவின் முதலமைச்சர் ஆகியுள்ளார். அவர்தான் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சர். அது உறுதி; மக்கள் எப்போதும் நம்மை தான் ஆதரிப்பார்கள். திமுகவைப் பொறுத்தவரை அவர்களின் குறிக்கோள் பொய்யுரையை, அவதூறை பரப்புவது தான்.

2021ல் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர். இதை யாரும் மாற்ற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|
|