Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரையில் மாலை வேளையில் பெய்த திடீர் மழை... மக்கள் மகிழ்ச்சி

மதுரையில் மாலை வேளையில் பெய்த திடீர் மழை... மக்கள் மகிழ்ச்சி

By: Nagaraj Mon, 08 May 2023 7:40:34 PM

மதுரையில் மாலை வேளையில் பெய்த திடீர் மழை... மக்கள் மகிழ்ச்சி

மதுரை: மதுரையில் மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

மதுரையில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி தற்போது வரை மதுரையில் மாலை நேரங்களில் லேசான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மதுரையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்ததால் மாலை 6 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.

area,heavy rain,madurai,weather , கனமழை, பகுதி, மதுரை, வானிலை

அதன்படி, பெரியார் பஸ் நிலையம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், கோரிபாளையம், அண்ணா பஸ் நிலையம், அண்ணாநகர், வண்டியூர், மேலமடை, மாட்டுதாவணி போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

கோடை மழை மதுரையை குளிர்வித்தாலும் கடந்த சில நாட்களாக மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. மேலும் தற்போது மதுரையில் பல்வேறு பகுதிகளில் கள்ளழகர் சுற்றி வலம் வருவதை முன்னிட்டு கள்ளழகரை காண வண்டியூர், அண்ணா நகர், மேலமடை போன்ற பகுதிகளில் காத்திருந்த மக்களிடையே மழை பெய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|