தமிழ்நாடு, புதுவை ,காரைக்காலில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்
By: vaithegi Fri, 02 Dec 2022 3:29:21 PM
சென்னை: தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை ..... கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு அதாவது டிசம்பர் .6ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 5ம் தேதி அன்று தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும்.
இதனை அடுத்து ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 04.12.2022 சென்று அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதை தொடர்ந்து டிச.5 மற்றும் 6ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். யனேயாவே இத்தகைய நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.