Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் வேட்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

பீகாரில் வேட்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

By: Nagaraj Sun, 25 Oct 2020 12:54:56 PM

பீகாரில் வேட்பாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு

வேட்பாளர் சுட்டுக் கொலை... பீகாரில் ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சி வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் சட்டப்பேரவைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்தல் வருகிற 28-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

shooting,candidate,bihar,hospital,arrest,riot ,துப்பாக்கிச்சூடு, வேட்பாளர், பீகார், மருத்துவமனை, கைது, பரபரப்பு

இந்நிலையில், ஷியோகர் மாவட்டத்தின் ஹத்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சியின் வேட்பாளர் நாராயண் சிங் என்பவர், அவரது ஆதரவாளர்களாக காட்டிக் கொண்ட நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் அதில் பலனின்றி நாராயண் சிங் உயிரிழந்து விட்டார். துப்பாக்கிச் சூட்டில் சுமார் ஐந்து முதல் ஆறு பேர் வரை ஈடுபட்டதாகவும் அவர்களில் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|
|