Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்; முதல்வர் தகவல்

ஊரடங்கு குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்; முதல்வர் தகவல்

By: Nagaraj Fri, 28 Aug 2020 09:06:50 AM

ஊரடங்கு குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்; முதல்வர் தகவல்

ஊரடங்கு குறித்து நாளை முடிவு... தமிழகத்தில் முழு ஊரடங்கு ஆக.,31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை 29ம் தேதி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆக.,31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

curfew,tomorrow,collectors meeting,cm ,ஊரடங்கு, நாளை, கலெக்டர்கள் கூட்டம், முதல்வர்

பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஞாயிற்றுக் கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் அளிக்கப்படாமல், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து நாளை நடைபெறும் கலெக்டர்கள் கூட்டத்திற்கு பின் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி, நாகபட்டினத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாகவும் அவர் கூறினார்.

Tags :
|