Advertisement

21 கி.மீ. தூரத்தை 17 நிமிடங்களில் கடந்த சோதனை ரயில்

By: Monisha Thu, 17 Dec 2020 10:46:02 AM

21 கி.மீ. தூரத்தை 17 நிமிடங்களில் கடந்த சோதனை ரயில்

மதுரையிலிருந்து போடி வரை மீட்டர் கேஜ் பாதையில் கடந்த 2009-ம் ஆண்டு வரை ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் பாதையை அகல பாதையாக மாற்ற திட்டமிட்டு ரயில்வே நிர்வாகம் பணிகளை மேற்கொண்டது. அதன்பிறகு முதல் கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை 37 கி.மீ. தூரம் அகல ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து உசிலம்பட்டியிலிருந்து தேனி வரையிலான ரயில் பாதை பணிகள் நடைபெற்றன. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரையில் முதல் சோதனை ரயில் ஓட்டம் நடத்தப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான 2-ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது.

meter gauge,train,rail,test,speed ,மீட்டர் கேஜ்,ரயில்,ரயில் பாதை,சோதனை,வேகம்

உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிப்பட்டி வரையிலான தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில் 3-ம் கட்டமாக ரயில்வே நிர்வாகம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு நேற்று காலை எட்டு பெட்டிகளுடன் ரயில் உசிலம்பட்டியில் இருந்து இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் சிங், தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரபாபு, தலைமை பொறியாளர் இளம்பூரணன், உதவி தலைமை பொறியாளர் சூரியமூர்த்தி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் இருந்து டிராலி மூலம் ரயில்வே அதிகாரிகள் வந்து தண்டவாளத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். உசிலம்பட்டியில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டிபட்டிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த 21 கி.மீ. தூரத்தை சோதனை ரயில் 17 நிமிடங்களில் கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|