Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிப்ரவரி 2-ம் தேதி அன்று இந்த பகுதிகளில் பவர் இருக்காது

பிப்ரவரி 2-ம் தேதி அன்று இந்த பகுதிகளில் பவர் இருக்காது

By: vaithegi Tue, 31 Jan 2023 3:04:12 PM

பிப்ரவரி 2-ம் தேதி அன்று இந்த பகுதிகளில் பவர் இருக்காது

சென்னை: தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடையானது தகுந்த முன்னறிவிப்போடு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பிப்ரவரி 2-ம் தேதியான வரும் வியாழக்கிழமையன்று சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் இதோ

power,maintenance work,power outage ,பவர் , பராமரிப்பு பணி,மின்தடை

அதன்படி தூத்துக்குடி: புன்னக்காயல், ஆசிரியர், சேர்ந்தபூமங்கலம், சுகந்தலை, மரந்தலை, காயல்பட்டினம், திருச்செந்தூர் சாலை, ஆறுமுகநேரி சாலை ஆகிய பகுதிகளிலும்

இதையடுத்து பொள்ளாச்சி: கோமங்கலம், ஜி.புதூர், சங்கம்பாளையம், பண்ணை கிணறு, முக்கு ஜல்லிப்பட்டி, சீலம்பட்டி, மலையாண்டிபட்டினம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, லட்சுமாபுரம், கோலார்பட்டி, நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 2-ம் தேதி மின் விநியோகம் தடை

Tags :
|