Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை (செப்.7) திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்விநியோகம் நிறுத்தம்

நாளை (செப்.7) திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி .. மின்விநியோகம் நிறுத்தம்

By: vaithegi Tue, 06 Sept 2022 9:55:21 PM

நாளை (செப்.7) திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி ..  மின்விநியோகம் நிறுத்தம்

திருப்பூர் : நாளை திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அதனால் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை துணை மின்நிலையத்தில் நாளை (செப்.7) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியியலாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.

எனவே அதன் காரணமாக பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

power supply stop,tirupur ,மின்விநியோகம் நிறுத்தம் ,திருப்பூர்

இதை தொடர்ந்து திருப்பூர் கோட்டம் ஆட்சியர் அலுவலக துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பூம்புகார், இந்திராநகர், பல்லடம் ரோடு, வித்யாலயம், பாரதிநகர், குளத்துபாளையம், வீரபாண்டி பொது சுத்திகரிப்பு நிலைய பகுதிகள் ஆகிய பகுதிகளிலும்

மேலும் கருப்பக்கவுண்டன்பாளையம், கே.ஆர்.ஆர், செல்வலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (செப்.7) காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என திருப்பூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :