Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..குற்றாலத்தில் குளிக்க அனுமதி..

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..குற்றாலத்தில் குளிக்க அனுமதி..

By: Monisha Sat, 16 July 2022 6:02:24 PM

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..குற்றாலத்தில் குளிக்க அனுமதி..

தென்காசி: பழைய குற்றால அருவியில் இனி 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தற்பொழுது சீசன் களைகட்ட துவங்கி உள்ள நிலையில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

tourist,kutralam,falls,allow ,சுற்றுலா ,குற்றாலம்,அருவி,அனுமதி,

ஆனால் பழைய குற்றால அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணமாகவும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் பழைய குற்றால அருவியிலும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு.ஆகாஷ் அறிவித்துள்ளார்.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|