Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை மீண்டும் இயக்கம்!

திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை மீண்டும் இயக்கம்!

By: Monisha Sat, 21 Nov 2020 09:26:04 AM

திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவனந்தபுரம் வரை மீண்டும் இயக்கம்!

கொரோனா ஊரடங்கால் திருச்சியில் இருந்து மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 9.45 மணிக்கு திருச்சி ரெயில் நிலையம் சென்றடைகிறது. இதனால், தென்மாவட்ட பயணிகள் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

trichy,intercity express,thiruvananthapuram,nagercoil ,திருச்சி,இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்,திருவனந்தபுரம்,நாகர்கோவில்

இந்த நிலையில், தற்போது இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி முதல் திருவனந்தபுரம் வரை மீண்டும் இயக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த ரெயில் 30-ந் தேதியில் இருந்து (வ.எண் 02627) திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு காலை 9.58 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். மாலை 3.20 மணிக்கு திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் (வ.எண். 02628) திருவனந்தபுரத்தில் இருந்து பகல் 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும். இரவு 7.55 மணிக்கு திருச்சி ரெயில்நிலையம் சென்றடையும். இந்த ரெயில் மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Tags :
|