Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு... மக்களுக்கு அறிவிப்பு

கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு... மக்களுக்கு அறிவிப்பு

By: Nagaraj Thu, 01 Dec 2022 11:42:12 AM

கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு... மக்களுக்கு அறிவிப்பு

கொழும்பு: கொழும்பில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதன்படி, நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) இரவு 10.00 மணி முதல் சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

council,water,national water supply,notice,people ,சபை, தண்ணீர், தேசிய நீர் வழங்கல், அறிவிப்பு, மக்கள்

கொழும்பு 11, 12, 4, 13, 14 மற்றும் 15 ஆகிய இடங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் போதுமான தண்ணீரை முன்கூட்டியே சேகரிக்குமாறும் அந்தச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags :
|
|