Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம்... உக்ரைன் ஜனாதிபதி உறுதி

நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம்... உக்ரைன் ஜனாதிபதி உறுதி

By: Nagaraj Sat, 01 Apr 2023 11:39:33 PM

நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம்... உக்ரைன் ஜனாதிபதி உறுதி

கீவ்: நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் நிலத்தில் ரஷ்யாவின் தடயம் கூட இருக்கக்கூடாது. எந்த எதிரியையும் தண்டிக்காமல் விடமாட்டோம் என்று உக்ரைன் ஜனாதிபதி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், ஒரு வருடம் கடந்த பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ தாக்குதல்கள் தொடர்கின்றன. போர் தொடங்கி 400 நாட்களுக்குப் பிறகு, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு வீடியோவில் தோன்றி, இந்த போரில் உக்ரைன் வெற்றிபெறும் என்று கூறினார்.

நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் நிலத்தில் ரஷ்யாவின் தடயம் கூட இருக்கக்கூடாது. எந்த எதிரியையும் தண்டிக்காமல் விடமாட்டோம். அதற்கான தகவல்களை சேகரித்து வருகிறோம். முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்கின்றன.

lands,principality,russia,sulurai,ukraine ,, அதிபர், உக்ரைன், சூளுரை, நிலங்கள், ரஷியா

நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம். உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

உக்ரைன் பயங்கர நாட்களை கடந்து வந்தது. இந்த குளிர்காலத்திலும் நாங்கள் தப்பி வந்து உள்ளோம். இந்த வார்த்தைகளுக்கு பின்னால், பெரிய முயற்சிகள் இருந்துள்ளன என கூறியுள்ளார். கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், எங்களுடைய கார்கிவ் பகுதிக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளது, கெர்சன் நகருக்கு திரும்பி வந்தது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாத்தது, என்பது உக்ரைனியர்களின் வீரம். இதனை இந்த உலகம் மறக்காது என்று அவர் கூறியுள்ளார்.

Tags :
|
|