Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னம்மா ஆசிரியை நீங்களே இப்படியா? கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

என்னம்மா ஆசிரியை நீங்களே இப்படியா? கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

By: Nagaraj Mon, 31 Oct 2022 7:08:05 PM

என்னம்மா ஆசிரியை நீங்களே இப்படியா? கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

நாகர்கோவில்: நாகர்கோவிலைச் சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகளுடன் ஆசிரியை மதுரை அருகே நடுரோட்டில் குத்தாட்டம் போட்டது தொடர்பாக கல்வி துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றின் மாணவ-மாணவிகள் மதுரை அருகே உள்ள பள்ளி ஒன்றில் நடந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வேனில் மதுரைக்கு புறப்பட்டனர். அவர்களுடன் ஆசிரியைகளும் சென்றிருந்தனர்.
மதுரை அருகே ஓட்டல் ஒன்றில் உணவு அருந்துவதற்காக வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது மாணவ, மாணவிகள் புஷ்பா படத்தின் பாடலுக்கு நடனம் ஆடினர். இவர்களுடன் சேர்ந்து ஆசிரியை ஒருவரும் நடனம் ஆடினார். இதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

education,authorities,investigation,dance,parents ,கல்வித்துறை, அதிகாரிகள், விசாரணை, நடனம், பெற்றோர்

அந்த வீடியோவில் ஆசிரியை தன்னை சமந்தாவாக பாவித்துக் கொண்டு மாணவர் ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு நடனம் ஆடுவது போன்று உள்ளது. இந்த வீடியோ வைரலானது. வெளியூர் நிகழ்ச்சிக்கு மாணவ,மாணவிகளை அழைத்து சென்ற போது நடு ரோட்டில் ஆசிரியை நடனமாடிய சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags :
|