Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஃப்ளூ காய்ச்சல் .. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

ஃப்ளூ காய்ச்சல் .. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

By: vaithegi Thu, 22 Sept 2022 2:31:22 PM

ஃப்ளூ காய்ச்சல்  ..  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

சென்னை; தமிழகத்தில் ஃப்ளூ வகை வைரஸ் காய்ச்சலானது வேகமாக பரவி கொண்டு வருகிறது. மேலும் நடப்பு ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கிடையே காய்ச்சலானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அதனால் பள்ளிகளில் குழந்தைகள் வருகை சற்று குறைந்து கொண்டே வருகிறது.

மேலும் தமிழகத்தில் influenza காய்ச்சலால் 1000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அதன் காரணமாக காய்ச்சலின் தாக்கம் குறையும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அரசியல்வாதிகள் முதல் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

anvil mahesh poiyamozhi,flu,vacation , அன்பில் மகேஷ் பொய்யாமொழி,ஃப்ளூ காய்ச்சல்,விடுமுறை

இதையடுத்து இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் காய்ச்சல் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.மேலும் அத்துடன் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த காய்ச்சல் 3 நாட்களுக்குள் சரியாகி விடும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதால் மாணவர்களுக்கிடையே கற்றல் பாதிப்பு தான் ஏற்படும். இதையடுத்து பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து 14417 என்ற இலவச எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.

Tags :
|