Advertisement

நாளை முதல் ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம்

By: Nagaraj Thu, 03 Sept 2020 5:06:51 PM

நாளை முதல் ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம்

நாளை முதல் தமிழக ரெயில் டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வரும் திங்கட்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

booking,tomorrow,southern railway,cm ,முன்பதிவு, நாளை, தெற்கு ரெயில்வே, முதலமைச்சர்

மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, தற்போது 7ம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரெயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை தமிழக ரெயில் டிக்கெட் கவுண்டர்கள், முன்பதிவு மையங்கள் திறக்கப்படும் என்றும், நாளை முதல் முன்பதிவு தொடங்கும் என்றும் தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags :