Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காதலிக்கு திருமணம்... காதலன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

காதலிக்கு திருமணம்... காதலன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

By: Monisha Sat, 12 Dec 2020 08:34:27 AM

காதலிக்கு திருமணம்... காதலன் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால், வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்னேஷ்வரன்(வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளது. இந்த காதல் அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே காதலர்களை அவர்களது பெற்றோர் கண்டித்தனர். மேலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இருவரையும் சந்திக்கவிடாமல் செய்தனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் விக்னேஷ்வரன் காதலித்து வந்த இளம்பெண்ணுக்கு, வேறொரு வாலிபருடன் திருமணம் நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், தனது நண்பர்களிடம் இனி என்னால் உயிர் வாழ முடியாது என்றுக்கூறி புலம்பி வந்துள்ளார்.

love,marriage,suicide,police,investigation ,காதல்,திருமணம்,தற்கொலை,போலீசார்,விசாரணை

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விக்னேஷ்வரன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர், வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது பெற்றோர், அவர்களது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, விக்னேஷ்வரனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|