- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- மாலை நேர சிற்றுண்டி உருளைக்கிழங்கு வெங்காய வடை
மாலை நேர சிற்றுண்டி உருளைக்கிழங்கு வெங்காய வடை
By: Nagaraj Sat, 05 Dec 2020 2:34:53 PM
உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 2
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - பாதி சுண்டு விரல் அளவு
பச்சை மிளகாய் - 1 எண்ணம்
கொத்தமல்லி இலை - 1 கொத்து
கறிவேப்பிலை - 3 கீற்று
கடலை எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை : முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பின் அதனை
துருவிக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக
நறுக்கி கொள்ள வேண்டும். பின் இஞ்சியை தோல் சீவி நசுக்கிக் கொள்ள
வேண்டும்.
உருளைக் கிழங்கில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து
விட வேண்டும். வாயகன்ற பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு, நறுக்கிய
பெரிய வெங்காயம், கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் பொடி, கரம் மசால் பொடி,
மிளகாய் பொடி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்த மல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு
சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள
வேண்டும். திக்காக வேண்டுமென்றால் சிறிது கடலை மாவு சேர்த்து கொள்ள
வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் ஊற்றி காய விட்டு
பிசைந்து வைத்துள்ள கலவையை கையில் எடுத்து வடைகளாகத் தட்டி போட்டு சிவக்க
பொரித்து எடுக்க சுவையான உருளைக்கிழங்கு வெங்காய வடை தயார்.