Advertisement

அருமையான ருசியில் புளிக்கூழ் செய்வோமா!!!

By: Nagaraj Sun, 22 Jan 2023 5:07:28 PM

அருமையான ருசியில் புளிக்கூழ் செய்வோமா!!!

சென்னை: அருமையான ருசியில் புளிக்கூழ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்இட்லி அரிசி – 1/2 கப்புளி – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுநல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

தாளிக்க
எண்ணெய் – 2 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிஉளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டிகடலை பருப்பு – 1 தேக்கரண்டிசிகப்பு மிளகாய் – 3பெருங்காயம் – 1/8 தேக்கரண்டிகருவேப்பில்லை – 1 ஆர்க்கு

rice flour,water,turmeric powder,salt,tamarind paste,ghee ,அரிசி மாவு, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு, புளிக்கூழ், நல்லெண்ணெய்

செய்முறை: அரிசியை களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். புளியை 1/4 கப் வெந்நீரில் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, 1/2 கப் தண்ணீர் சேர்த்து மை போல அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து கலக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து, தயாராக புளிக்கரைசல் வைக்கவும். புளிக்கரைசல், அரைத்த மாவு சேர்த்து கலக்கவும். (தண்ணீர் கொதிப்பதற்கு முன் சேர்க்க வேண்டும். நன்கு கலந்து கிண்டிக்கொண்டே இருக்கவும். நிறம் மாறி கெட்டியானவுடன், மிதமான தீயில் வைக்கவும். மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும். ஒட்டாமல் பதத்தில் இருக்கும்.

குறிப்புகள்: அரைத்த அரிசி மாவு, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைத்துக்க்கொண்டு, தாளித்த பின் ஊற்றி கிளறலாம். கடையில் வாங்கும் அரிசி மாவு வைத்து செய்வதென்றால் 3/4 கப் சேர்த்து செய்யலாம். வரகு, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்கள் கொண்டும் இதே போல செய்யலாம்.

Tags :
|
|