- வீடு›
- சமையல் குறிப்புகள்›
- திணை தேங்காய் பால் புலாவ் செய்முறை உங்களுக்காக!!!
திணை தேங்காய் பால் புலாவ் செய்முறை உங்களுக்காக!!!
By: Nagaraj Mon, 03 Oct 2022 10:44:59 PM
சென்னை: சிறுதானியங்கள் அடங்கிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். சிறுதானியங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் தன்மை கொண்டவை.
தேவையான பொருட்கள் :
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - ஒன்று
திணை அரிசி - ஒரு கப்
பச்சைபட்டாணி - அரைக்கப்
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க :
பிரியாணி இலை - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
சோம்பு - கால் தேக்கரண்டி
செய்முறை : முதலில் திணை அரிசியை 10 நிமிடங்கள் நன்கு ஊறவைக்க
வேண்டும். குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைக்
கொண்டு தாளித்த பின், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதையும்
சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து பச்சை வாசனை போனவுடன் பச்சை பட்டாணி
சேர்த்து வதக்கி ஒரு கப் தேங்காய் பால், தண்ணீர், உப்பு, திணை அரிசி
சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பிறகு குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் சூப்பரான திணை-தேங்காய்ப்பால் புலாவ் தயாராகிவிடும்.