Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • குழந்தையின் திறமையை வளர்க்க...அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள்!

குழந்தையின் திறமையை வளர்க்க...அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள்!

By: Monisha Thu, 02 July 2020 5:27:45 PM

குழந்தையின் திறமையை வளர்க்க...அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள்!

உலகில் எத்தனை அன்பான உறவுகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு மிக மிக அவசியமான ஒன்று. எவ்வளவு பரபரப்பான அப்பாவாக இருந்தாலும் பிள்ளைக்காக சொத்து சேர்ப்பதைவிட முக்கியம் அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான் என்கிறார் மனநல மருத்துவர்.

அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மனவளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள். சமூகத்துடனான பழக்கமும் அய்க்யூவும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது. படிப்பில் முழுத்திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுவார்கள். குழந்தையின் திறமையை வளர்க்க ஏதேதோ தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது நேரம் ஒதுக்கி அவர்களோடு விளையாட வேண்டும். எல்லாக் குழந்தைகளுமே முழுத் திறமையுடனும், அறிவுடனும்தான் பிறக்கின்றன. ஒரு மின்னல் விழுந்து மலையின் ஊற்றுக்கண் திறப்பது போல, குழந்தைக்குள் இருக்கும் அறிவுக் கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல் அப்பாக்களின் அன்பில் ஒளிந்திருக்கிறது.

children,fathers,skill,mental,relationship ,குழந்தைகள்,அப்பாக்கள்,திறமை,மனவளர்ச்சி,உறவு

தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து, தெளிவுபடுத்திக் கொள்ளும் போக்கை குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது, விவாதிப்பது என இருவருக்குமான தளம் விரிவடையும் போது மூளையின் செயல்பாடு அதிக அளவில் தூண்டப்படுகிறது.

தாயின் பனிக்குடம் தாண்டி உதிக்கும் அந்தத் தாமரையின் சின்னச் சிரிப்பு, செல்லச் சிணுங்கல், மின்னல் கோபம், கொல்லும் அழுகை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அப்பா நடக்கும் போது இருவருக்குமான இன்னொரு தொப்புள்கொடி முடிச்சு போடப்படுகிறது. அது ஆயுள் முழுவதும் அறுக்கப்படுவதில்லை.

Tags :
|
|