ஆனி மாத பூஜை ... சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு

கேரளா: கேரளாமாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் மண்டல மற்றும் அகர விளக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். விழா காலங்கள் தவிர்த்து மாதாந்திர பூஜைக்காகவும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து விழாக்காலங்களில் தமிழ்நாடு , கேரளா, ஆந்திரா , கர்நாடகா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத பிறப்பின் போது முதல் 5 நாட்கள் பூஜைகள் செய்யப்படும்.

அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயில் ஆனி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தந்திரு கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் , மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாரதனை நடத்துகிறார்.

மேலும் நாளை முதல் வருகிற 20 -ம் தேதி வரை 5 நாட்கள் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 20ம் தேதி ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.